தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் என பலர் நடிக்கிறார்கள். வருமான வரித்துறை சார்பில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் லோகேஷ் கனகராஜ். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, சினிமாவை ரசிகர்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்க வேண்டும். தங்களது உயிரையும் விடும் அளவுக்கு எல்லாம் சினிமாவில் ஒன்றுமில்லை. அதனால் அனைத்து ரசிகர்களும் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். தற்போது தளபதி 67வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்களில் புதிய அப்டேட் எதிர்பார்க்கலாம் என்றார். மேலும் தமிழ்நாடா? தமிழகமாக? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டை எப்போதும் தமிழ்நாடு என்று சொல்ல விரும்புவேன் என்றார்.