ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
40 ஆண்டுகளாக தனது காந்த குரலால் இசை ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார். கிட்டத்தட்ட 20 மொழிகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை செய்தவர், மூன்று முறை தேசிய விருது பெற்றவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.. வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. பிரபலங்கள் பலரும் வாணி ஜெயராமுடனான தங்களது இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் கோபி சுந்தர், வாணி ஜெயராம் குறித்து கூறும்போது, “ஒரு கட்டத்தில் மலையாளத்தில் பாடல்கள் பாடாமல் ஒதுங்கி இருந்த வாணி ஜெயராமை கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு 2014 இல் நான் இசையமைத்த 1983 என்கிற படத்திற்காக அழைத்து வந்து ஓலஞ்சாலி குருவி என்கிற பாடலை பாட வைத்தேன். அதைத்தொடர்ந்து புலி முருகன், கேப்டன் ஆகிய படங்களில் என்னுடைய இசையில் பாடல்களை பாடியுள்ளார்.
தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வாணி ஜெயராமை தேடி வந்தன. தமிழகம், ஆந்திரா, ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்கள் வாணி ஜெயராமுக்கு மாநில அரசு விருது வழங்கி கவுரவித்தன. ஆனால் மலையாள திரையுலகில் அதிகப்படியான பாடல்களை பாடி இருந்தும் தனக்கு கேரள அரசு விருது கிடைக்காதது குறித்து நீண்ட நாட்கள் மன வருத்தத்தில் இருந்தார்.. அந்த மன வருத்தம் மறையாமலேயே இவ்வுலகை விட்டு சென்று விட்டார்” என தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் கோபி சுந்தர்.