இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் 'வாத்தி', தெலுங்கில் 'சார்' என தனுஷ் நடிக்கும் படம் நாளை வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தனித்தனியாக படமாக்கப்பட்டுள்ள இந்தப்படம் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார் தனுஷ்.
படம் வெளியாகும் தினத்தில் அதிகாலை காட்சிகள், காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவதுதான் தற்போதைய வழக்கம். பொதுவாக ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக 20 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதிக அளவிலான பிரிமீயர் காட்சிகள் இங்கு நடைபெற்றன. தற்போது அமெரிக்காவில் மட்டுமே வெளியீட்டிற்கு முன்பாக அப்படிப்பட்ட காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போது 'சார்' படத்திற்காகத் தெலுங்கில் இன்றே பல நகரங்களில் பிரிமீயர் காட்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். ஐதராபாத், விசாகப்பட்டிணம், விஜயவாடா, நெல்லூரி, ராஜமுந்திரி, காக்கிநாடா ஆகிய ஊர்களில் இன்று இரவு பிரிமீயர் காட்சிகள் நடைபெறுகிறது. ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெறும் நான்கு பிரிமீயர் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்றுத் தீர்ந்துவிட்டது.