ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக கருத்தை மையமாக வைத்து கடந்த 2019ல் துவங்கப்பட்ட படம் கன்னித்தீவு. சுந்தர் பாலு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஸ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் சுபிக்ஷா என 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியிலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் உலகப் பெண்கள் தனமான மார்ச்-8ம் தேதி வெளியாக இருப்பது குறித்து படத்தின் இயக்குனர் சுந்தர் பாலு மற்றும் நாயகி வரலட்சுமி சரத்குமார் இருவரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இது பற்றி வரலட்சுமி கூறும்போது, “பெண்களின் நட்பை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் அரிதாகவே படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த சுவாரசியமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம் அடைகிறேன். அதுமட்டுமல்ல நேரடியாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாவது இன்னும் த்ரில்லிங்காக இருக்கிறது. பெண்கள் தினத்தில் வெளியாகும் இந்த படம் நேரடியாகவே ரசிகர்களை சென்றடையும் என்பதிலும் எனக்கு சந்தோசம் தான்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் வரலட்சுமி தமிழ, தெலுங்கு என இருமொழிகளில் நடித்துள்ள கொன்றால் பாவம் திரைப்படம் வரும் மார்ச்-10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.