தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக கருத்தை மையமாக வைத்து கடந்த 2019ல் துவங்கப்பட்ட படம் கன்னித்தீவு. சுந்தர் பாலு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஸ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் சுபிக்ஷா என 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படம் நேரடியாக தொலைக்காட்சியிலேயே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் உலகப் பெண்கள் தனமான மார்ச்-8ம் தேதி வெளியாக இருப்பது குறித்து படத்தின் இயக்குனர் சுந்தர் பாலு மற்றும் நாயகி வரலட்சுமி சரத்குமார் இருவரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இது பற்றி வரலட்சுமி கூறும்போது, “பெண்களின் நட்பை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் அரிதாகவே படங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த சுவாரசியமான படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம் அடைகிறேன். அதுமட்டுமல்ல நேரடியாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாவது இன்னும் த்ரில்லிங்காக இருக்கிறது. பெண்கள் தினத்தில் வெளியாகும் இந்த படம் நேரடியாகவே ரசிகர்களை சென்றடையும் என்பதிலும் எனக்கு சந்தோசம் தான்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் வரலட்சுமி தமிழ, தெலுங்கு என இருமொழிகளில் நடித்துள்ள கொன்றால் பாவம் திரைப்படம் வரும் மார்ச்-10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.