தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சோசியல் மீடியாவில் பிரபலங்களின் பெயரில் போலியாக கணக்குகள் துவக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்கள் அவ்வப்போது தங்கள் வேலையை காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர் தனது பெயரில் சோசியல் மீடியாவில் கணக்கு துவங்கப்பட்டு சினிமாவில் விளம்பர படங்களில் நடிப்பவர்களுக்கு வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும் என கூறி மோசடி நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மலையாள திரை உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமான தினேஷ் பிரபாகர், கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் வில்லனுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல மாதவன் நடித்த ராக்கெட்ரி படத்திலும் மோசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மட்டுமல்ல, மலையாளத்திலும் கூட இன்னும் அதிகமாக பிரபலமானார். இந்த நிலையில் தான் சினிமாவில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தனது பெயரில் பண மோசடி நடப்பதாக கேள்விப்பட்டு, சினிமா ஆசையில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார் தினேஷ் பிரபாகர்.
அதில் தன் பெயரில் யாரோ ஒருவர் மோசடி கணக்கு துவங்கியுள்ளார் என்றும் சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பணம் கேட்டால் தரவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையில் புகார் அளிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார். அப்படி யாரேனும் இதற்குமுன் பணம் கொடுத்திருந்தால் கூட சம்பந்தப்பட்ட நபரின் நம்பகத்தன்மையை சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் தினேஷ் பிரபாகர்.