இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திரையுலகில் வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை வென்ற இரண்டு இந்திய படைப்புகளை பார்லிமென்ட்டில் அடுத்த வாரம் திரையிடப்படவுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது : இரண்டு படங்களின் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரை கவுரவிக்கும் திட்டமும் உள்ளது. ஆர்ஆர்ஆர் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படமும் எம்.பி.க்களுக்கு அடுத்த வாரம் பார்லிமென்ட்டில் பால் யோகி அரங்கத்தில் திரையிடப்படவுள்ளது. இதற்கான முயற்சிகளை அமைச்சர் அனுராக் தாக்குர் மேற்கொண்டு வருகிறார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.