இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இயக்குனர் பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்தாண்டு தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் அவர் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. இப்போது தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், நிர்மல்குமார் இயக்கும் 'நா நா' உட்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே அவர் மீண்டும் படம் இயக்க இருக்கிறார். கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற படத்தை இயக்கி, நடித்திருந்த பாரதிராஜா, பிறகு நடிப்பில் பிசியானார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையை இயக்கி, நடிக்க போகிறார். தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு 'தாய்மெய்' என்று தலைப்பு வைத்துள்ளாராம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.