வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக நடித்திருந்தவர் மலையாள நடிகர் விநாயகன். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் வித்தியாசமான வசன உச்சரிப்புடன் தனது முதல் தமிழ் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது மனைவியிடம் இருந்து தான் பிரிந்து விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விநாயகன்.
இது குறித்து விநாயகன் அந்த வீடியோவில் கூறும்போது, “எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான அனைத்து திருமண உறவுகளும் சட்ட உறவுகளும் இந்த தருணத்தில் இருந்து முடிவுக்கு வருகின்றன” என்று கூறியுள்ளார். விநாயகனை பொறுத்தவரை, அவரது நடிப்பிற்காக பலராலும் பாராட்டப்பட்டாலும் பெரும்பாலும் பொதுவெளியில் ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். கடந்து சில மாதங்களுக்கு முன்பு கூட பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் மரியாதை குறைவாக பேசி பின் அதற்காக மன்னிப்பு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.