ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு |
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் நூலகங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. நூலகங்கள் இருக்கும் சிறைகளில் அது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில் சிறப்பு நூலக திட்டத்திற்கு சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக் கண்ணன் உள்ளிட்டோர் புத்தகங்களை சேகரிக்கின்றனர். இந்த திட்டத்திற்கு பலரும் நூல்களை வழங்கி வருகிறார்கள்.
நடிகர் விஜய்சேதுபதி மதுரை மத்திய சிறை கைதிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகை புத்தகங்களை நன்கொடையாக வழங்க திட்டமிட்டார். இதையொட்டி சுமார் 1000 புத்தகங்களுடன் மதுரை மத்திய சிறைக்கு சென்றார். சிறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தக்கண்ணன் ஆகியோரை சந்தித்து புத்தகங்களையும் வழங்கினார்.
இது குறித்து விஜய்சேதுபதி கூறும்போது “சிறைக் கைதிகளை புத்தகங்கள் மூலம் நல்வழிப்படுத்தும் முயற்சியை பாராட்டுகிறேன். இது பற்றி கேள்விப்பட்டதும் நிறைய புத்தகங்களை வழங்க வேண்டும் எனக் கருதினேன். தற்போது, உசிலம்பட்டி பகுதியில் சினிமா ஷூட்டிங்கில் இருப்பதால் முதல் கட்டமாக 1000 புத்தகங்களை வழங்குகிறேன். இலக்கியம், கிராமத்து பின்னணி, கைதிகளை நல்வழிப்படுத்தும் போதனை உள்ளிட்ட பல்வேறு விதமான புத்தகங்களை வழங்கியுள்ளேன். சிறைத் துறை அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு. இத்திட்டம் வெற்றி பெறவேண்டும்” என்றார்.