இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இயக்கி, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்த படம் முதலில் நாளை வெளிவருதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மாங்காடு மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், “பாண்டியராஜன் நடித்த ஆய்வுக்கூடம் என்ற படத்தை 2016ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டோம். அந்த படத்தின் கதையை எங்களிடம் கேட்காமல், பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் விஜய் ஆண்டனி எடுத்துள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், மே மாதம்தான் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளோம். எனவே, தடை எதுவும் பிறப்பிக்க வேண்டாம்'' என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.