தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'மாநாடு' படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியுள்ள படம் 'கஸ்டடி'. இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகிறார். கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியா மணி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளதால் நாளை வெளியாக உள்ள படங்களில் அதிக வியாபாரத்தை நடத்தியுள்ள படம் இதுதான். இப்படத்தின் தியேட்டர் உரிமை தெலுங்கில் சுமார் 18 கோடி அளவிற்கு நடந்துள்ளது. ஆனால், தமிழில் 3 கோடி அளவில்தான் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். கர்நாடகாவில் 1 கோடிக்கும், வெளிநாடுகளில் 3 கோடி வரையிலும் விற்கப்பட்டுள்ளதாம். மொத்தமாக சுமார் 25 கோடி வரை வியாபாரம் நடந்துள்ளது.
தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் நாக சைதன்யா என்றால் சமந்தாவின் முன்னாள் கணவர் என்ற அளவில்தான் தெரியும். இப்படம் இங்கு வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன் எனக் கூறியுள்ளார் நாக சைதன்யா.