ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இது அவரது 48வது படமாகும். இந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஜினிக்காக தான் உருவாக்கிய கதையில் சிம்புவை இயக்கப் போகும் தேசிங்கு பெரியசாமி, தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த பதான் படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது சம்பளம் பல கோடிக்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிம்புவை பொறுத்தவரை 20 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே சிம்புவை விட அதிகப்படியான சம்பளத்துக்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.