ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஏப்ரல் 28ல் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன் 2'. இரண்டு வாரத்திற்குள்ளாக 300 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. தற்போது இப்படம் 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 10 படங்கள் வெளிவந்தாலும், 3வது வாரத்திலும் வார இறுதி நாட்களில் பல தியேட்டர்களில் இப்படம் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவு நன்றாக உள்ளது.
முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இப்படம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வசூலில் ஏமாற்றத்தைத் தரவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வரை இப்படம் தாக்குப்பிடித்து ஓடும் என்கிறார்கள். 400 கோடி வசூலைக் கடப்பது உறுதி, 500 கோடி வசூலைக் கடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.