இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜோதிகா நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான 'ராட்சசி' படத்தை இயக்கிய கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் பிரதாப் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். டி. இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படம் பற்றி கவுதமராஜ் கூறியதாவது: மரண தண்டனை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக நிறைவேற்றப்பட்டு வந்தது. சிலுவையில் அறைந்து கொன்றார்கள், தலையைவெட்டி கொன்றார்கள், யானையை மிதிக்க வைத்து கொன்றார்கள். அப்படி தமிழ்நாட்டில் இருந்த ஒரு முறைதான் கழுவேற்றுவது. கழுவேத்தி மரங்கள் இப்போதும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் அதனை தெய்வமாக வணங்கி வருகிறார்கள். இப்போதும் கோழிகளை அந்த மரத்தில் பலிகொடுத்து வழிபாடு செய்கிறார்கள். இந்த வழிபாட்டின் பின்னணியை ஆய்வு செய்து அதனை இன்றைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு உருவானதே இந்த படம். இதில் அருள்நிதி மூர்க்கன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு ஊரில் நல்லது கெட்டதில் பங்கேற்பவராக நடித்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் அரசியலும் பேசுகிறார். இந்த படத்திற்காக அவர் எடை கூடி பெரிய மீசை வைத்து நடித்திருக்கிறார். இது ஜாதி ரீதியான படம் அல்ல. சமூக நீதிக்கான படம் என்று சொல்லலாம். என்றார்.