'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் அதேவேளையில் சிலர் அவரை பற்றி ஆபாசமாக பேசியும் வருகின்றனர். அப்போதெல்லாம் பாடி ஷேமிங், நெகட்டிவ் கமெண்டுகளை தூக்கி போட்டுவிட்டு பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வந்த நீலிமா, தற்போது சிலர் தனது மார்பகங்கள் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்வதாக வருத்தப்பட்டுள்ளார்.
நீலிமாவுக்கு அண்மையில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் அவரது உடல் எடையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிலர் நீலிமாவை ஆபாசமாக பாடி ஷேமிங் செய்வதோடு அவரது மார்பகங்கள் பற்றியும் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த அவர் அண்மையில் ஒரு பேட்டியின் போது, 'குழந்தைக்கு பால் கொடுப்பதால் தான் என் மார்பகம் அப்படி இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது'என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.