திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் பல மொழிகளை வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(மே 19) அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமார் தயாரித்து இயக்குகிறார். இவர் இதற்கு முன்பே விஜய் சேதுபதி வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜை மலேசியாவில் உள்ள முக்கிய கோவிலில் நடைபெற்றது.