தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. 'ஆனந்தி' கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு கவனம் பெற்றது. தொடர்ந்து 'அங்காடி தெரு' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அஜித்தின் 'மங்காத்தா', சூர்யாவின் 'சிங்கம் 2' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 'பாவக்கதைகள்' ஆந்தாலஜிக்குப்பிறகு தமிழில் அவர் நடிப்பில் 2 ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான 'இரட்ட' படத்தில் நடித்திருந்தார். அஞ்சலி திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது 50வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு 'ஈகை' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். க்ரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தரண் குமார் இசையமைக்கிறார்; பாடல்களை அறிவு எழுதுகிறார். இந்நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றி குடைகள் குழுமியிருக்க நடிகை அஞ்சலி தலையில் சிவப்பு நிற துணி போர்த்தியபடி திரும்பி பார்ப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.