சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. 'ஆனந்தி' கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு கவனம் பெற்றது. தொடர்ந்து 'அங்காடி தெரு' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அஜித்தின் 'மங்காத்தா', சூர்யாவின் 'சிங்கம் 2' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 'பாவக்கதைகள்' ஆந்தாலஜிக்குப்பிறகு தமிழில் அவர் நடிப்பில் 2 ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான 'இரட்ட' படத்தில் நடித்திருந்தார். அஞ்சலி திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது 50வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு 'ஈகை' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை அசோக் வேலாயுதம் இயக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். க்ரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரடொக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தரண் குமார் இசையமைக்கிறார்; பாடல்களை அறிவு எழுதுகிறார். இந்நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றி குடைகள் குழுமியிருக்க நடிகை அஞ்சலி தலையில் சிவப்பு நிற துணி போர்த்தியபடி திரும்பி பார்ப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.