வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் |
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் மற்றும் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்சலியின் ஐம்பதாவது படம் குறித்த ஒரு போஸ்டர் வெளியானது. அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கும் அந்த படத்திற்கு ஈகை என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக காஷ்யப் என்பவர் நடிக்கிறார். இவர்களுடன் பாரதிராஜா, புஷ்பா சுனில், குக் வித் கோமாளி புகழ் உட்பட பலரும் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. மேலும் திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஒரு சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கிறார் அஞ்சலி. ஜூன் மாதம் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.