குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

சிவாஜிகணேசன், கமல்ஹாசன், கவுதமி, ரேவதி, நாசர், வடிவேலு நடித்து வெளிவந்த “தேவர் மகன்” படம் குறித்த தனது கருத்தை 'மாமன்னன்' பட இசை வெளியீட்டின் போது பேசியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். அப்போது அவர் பேசியது குறித்து தற்போது கமல்ஹாசன் ரசிகர்கள் திடீரென மாரி செல்வராஜை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மற்றுமொரு பேச்சின் போது அவர் கமல்ஹாசன், கவுதமி நடித்து வெளிவந்த 'பாபநாசம்' படம் பற்றியும் பேசியிருந்தார். கமல்ஹாசனின் இரண்டு படங்கள் பற்றி மாரி செல்வராஜ் விமர்சித்துப் பேசியதைக் குறித்து பல கமல்ஹாசன் ரசிகர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். இரண்டு படங்களைப் பற்றிய புரிதலும் அவருக்கில்லை என்றும், மாரி செல்வராஜ் கூட அவரது படங்களில் குறிப்பிட்ட சாதியைப் பற்றித்தான் மையப்படுத்தி படமெடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
'தேவர் மகன்' படத்தில் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரமான 'இசக்கி' கதாபாத்திரம்தான் 'மாமன்னன்' படம் உருவாகக் காரணம் என்றும் மாரி செல்வராஜ் பேசியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள 'மாமன்னன்' படம் அடுத்த வாரம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளிவந்த பின் அப்படத்தைப் பற்றி கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளது.