ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விடுதலை படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாக பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் வெற்றிமாறன். வாடிவாசல் என்ற படத்தில் சூர்யாவும், வெற்றிமாறனும் இணைய இருப்பதாக கடந்த 2020 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அப்படத்துக்கான டெஸ்ட் சூட் ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் களமிறங்கும் சூர்யா காளையுடன் மல்லுக்கட்டும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதை சூர்யாவின் கடந்த ஆண்டு பிறந்த நாளின் போது வெளியிட்டார்கள். அதன்பிறகு அப்படம் குறித்த எந்த அப்டேட்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடத்தில் வாடிவாசல் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், தற்போது வாடிவாசல் பாடத்தின் அனிமேட்ரானிக்ஸ் வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. அதனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிந்ததும் வாடிவாசல் படம் தொடங்கப்படும். தற்போது சூர்யா பயிற்சி எடுத்து வரும் ஜல்லிக்கட்டு காளை போன்று, ரோபோ காளை ஒன்றையும் தான் உருவாக்கி வருவதாகவும், அதற்கான வேலைகள் நடப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் வெற்றிமாறன்.
அதனால் விடுதலை-2 படத்திற்கு பிறகு சூர்யா- வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் படம் தொடங்கப்படும் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. மேலும் இதே நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், ‛‛நிச்சயம் வட சென்னை 2 படம் உருவாகும். அதேப்போன்று வாய்ப்பு அமையும் போது நிச்சயம் விஜய்யை வைத்து படம் இயக்குவேன்'' என்றார்.