2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
சமீபத்தில் ஓம் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான படம் ஆதிபுருஷ். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு தங்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது என்றே ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த படத்தில் ராமன், சீதா, ராவணன், லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகிய கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. அதேசமயம் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்கள் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. அப்படி ஒருவர்தான் இந்த படத்தில் அங்கதன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மனோகர் பாண்டே.
இவர் இதற்கு முன்னதாக சூப்பர் 30 மற்றும் கங்குபாய் கத்தியவாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மனோகர் பாண்டே. இந்த படத்தில் மம்முட்டியின் போலீஸ் குழுவினருக்கு சில முக்கியமான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் விதமாக தகவல் கொடுத்து உதவும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் மனோகர் பாண்டே.