ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1998ல் ஹிந்தியில் வெளியான படம் சத்யா. அதுவரை வில்லன் நடிகராக நடித்து வந்த ஜே.டி சக்கரவர்த்தி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியன் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ரங்கீலா புகழ் ஊர்மிளா தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரு பக்காவான கேங்ஸ்டர் படமாக இது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. சொல்லப்போனால் ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை பாலிவுட்டில் இந்த படம் ஏற்படுத்தியது.
இந்த படம் வெளியாகி நேற்றுடன் 25 வருடங்களை தொட்டுள்ளது. இந்த படம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகி ஊர்மிளா. அதேசமயம் இந்த படம் வெளியாகி 25 வருடங்களாகியும் அவர் இன்னும் ஒரு மனக்குறையுடன் தான் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படம் வெளியான சமயத்தில் தான் மிகவும் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து பிசியாக இருந்து வந்ததாகவும் அந்த சமயத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில் கிளாமர் இல்லாமல் இந்தப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் இதற்காக எனக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு விருதுக்கும் நான் நாமினேட் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஊர்மிளா.