இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த். இவர் முன்னாள் பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தமிழில் சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி போன்ற முன்னணி கதாநாயகர்கள் படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.
இவருக்கு சினேகா மற்றும் சாதனா என இரண்டு மகள்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இவர் மகள் சாதனாவிற்கு திருமணம் நடைபெற்றது. விஷ்ணுராஜ் என்பவரை சாதனா திருமணம் செய்து உள்ளார். இருவருமே ஆர்க்கிடெக் படித்துள்ளனர்.
சென்னையில் நடந்த இந்த திருமண விழாவில் ஷங்கர் தவிர வேறு எந்த பெரிய இயக்குனர்களும் கலந்து கொள்ளவில்லை. ஓரிரு தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த சில ஹிரோக்கள் கலந்து கொள்ளாத நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிஸியான நேரத்திலும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அதேப்போல் நடிகர் ஜீவாவும் பங்கேற்றார்.