தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தொழில், சினிமா என கண்ணும் கருத்துமாக இருக்கும் வனிதா விஜயகுமார் தனது மகள்களுக்கு நல்லதொரு தாயாக இருந்து வருகிறார். இப்போதெல்லாம் யாரிடமும் சண்டை போடமால் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் மிகவும் அமைதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் மகள்கள் மற்றும் மகனுடன் ஒரே குடும்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வனிதா, 'சில நினைவுகள் என்றும் மறையாது. காலம் வேகமாக செல்கிறது, குழந்தைகள் நமக்கு சமமாக வளர்ந்து வருகிறார்கள். எனது மகள்கள் தான் எனக்கு சிறந்த நண்பர்கள். அவர்கள் மனிதர்களுக்குரிய அனைத்து அழகான குணங்களுடன் வளர்கிறார்கள். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்' என பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த தாய்மை குணத்தை பாராட்டும் ரசிகர்கள், வனிதா அவரது மகனுடனும் சீக்கிரமே சேர வேண்டும் என ஆறுதல் சொல்லி வருகின்றனர்.