திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
இந்த வாரம் நடிகை தமன்னாவின் வாரம் என்று சொல்லும் விதமாக ஒரே நேரத்தில் தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படமும் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள போலா சங்கர் திரைப்படமும் ஆகஸ்ட் 10 மற்றும் 11 என அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ளதுடன் அவை அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகை தமன்னா. இந்த நிலையில் தற்போது கேரளாவில் கொல்லத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்தார் தமன்னா.
காவலா பாடல் மூலம் சமீப நாட்களாக மொழிகளை தாண்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் தமன்னா. இதனால் அவரை பார்ப்பதற்காக கடை முன்பாக ரசிகர் கூட்டம் முண்டியடித்தது. திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிவப்பு கம்பள விரிப்பில் அவர் நடந்து வந்த போது திடீரென இளம் ரசிகர் ஒருவர் தமன்னாவின் முன் வேகமாக வந்து அவரது கையைப் பற்றி குலுக்க முயன்றார்.
அருகில் இருந்த பவுன்சர்கள் சுதாரித்து உடனடியாக அவரை இழுத்து அப்புறப்படுத்த முயன்றனர். இருந்தாலும் தமன்னாவுக்கு கை கொடுத்து ஒரே ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டுகோள் வைத்தார் அந்த இளைஞர் தமன்னாவும் இந்த விஷயத்தை சீரியஸாக்காமல் அந்த இளைஞருடன் கைகுலுக்கி அவர் செல்பி எடுக்கும் வரை பொறுமையாக போஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.