ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
90-கள் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் நடிகர் அப்பாஸ். அதன்பின் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்று செட்டிலானார். அங்கே பெட்ரோல் பங்க் வேலை, மெக்கானிக் என வேலை கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த செய்தியானது சோஷியல் மீடியாக்களில் பரவ பலரும் அப்பாஸின் தற்போது நிலையை கண்டு வருத்தமடைந்தனர். அவருக்கு ஒரு கம்பேக் கிடைக்கக் கூடாதா? என்று கூட கடவுளை பிரார்த்தித்தனர்.
இந்நிலையில், அப்பாஸ் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸை 90களின் கனவு நாயகன் என பெருமைபடுத்தி அழைக்கின்றனர். மேடைக்கு வந்த அப்பாஸ் மாகாபாவுடன் கலாட்டா, சிறுமியுடன் குத்தாட்டம் என எனர்ஜிடிக்காக இருப்பதை பார்த்து ரசிகர்களும் உற்சாகத்துடன் அந்த எபிசோடை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.