தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

90-கள் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார் நடிகர் அப்பாஸ். அதன்பின் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சென்று செட்டிலானார். அங்கே பெட்ரோல் பங்க் வேலை, மெக்கானிக் என வேலை கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த செய்தியானது சோஷியல் மீடியாக்களில் பரவ பலரும் அப்பாஸின் தற்போது நிலையை கண்டு வருத்தமடைந்தனர். அவருக்கு ஒரு கம்பேக் கிடைக்கக் கூடாதா? என்று கூட கடவுளை பிரார்த்தித்தனர்.
இந்நிலையில், அப்பாஸ் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அப்பாஸை 90களின் கனவு நாயகன் என பெருமைபடுத்தி அழைக்கின்றனர். மேடைக்கு வந்த அப்பாஸ் மாகாபாவுடன் கலாட்டா, சிறுமியுடன் குத்தாட்டம் என எனர்ஜிடிக்காக இருப்பதை பார்த்து ரசிகர்களும் உற்சாகத்துடன் அந்த எபிசோடை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.