இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கத்தில் அஞ்சலி கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஈகை. இது அவரது ஐம்பதாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. அப்போது நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கொரில்லாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்திருக்கிறார் அஞ்சலி. அதையடுத்து சென்னை திரும்பி உள்ள ஈகை படக்குழு, விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. ஈகை படம் தவிர ராம்சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.