திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்க இருந்த படம் 'வணங்கான்'. படப்பிடிப்பு துவங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பாலா தனது பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றால் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.