ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் உள்ள நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதை விரும்புவதில்லை. காரணம் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் என்கிற எண்ணம் சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கு ஏற்படாவிட்டாலும் கூட அவர்களது ரசிகர்களுக்குள் மோதல் ஏற்படும் என்பதற்காக தவிர்த்து வருகிறார்கள். அதேசமயம் பாலிவுட்டில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் இப்படி மல்டி ஸ்டார் படங்களில் இணைந்து நடிப்பதை வரவேற்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்திருந்தார் சல்மான்கான். அப்படிப்பட்டவர்கள் ஒரு படத்தில் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க தயங்குவார்களா என்ன? அப்படி ஒரு படம் இவர்கள் இருவரது கூட்டணியில் விரைவில் உருவாக இருக்கிறது.
இந்த படத்திற்கு டைகர் வெர்சஸ் பதான் என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாம்.. ஏற்கனவே சல்மான்கான் நடித்து ஹிட்டான டைகர் மற்றும் ஷாரூக்கான் நடிப்பில் ஹிட்டான பதான் என இரண்டு படங்களின் டைட்டிலையுமே இணைத்து மாஸ் டைட்டிலாக புதிய படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். பதான் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.
மலையாளத்தில் இதேபோன்று மம்முட்டி நடித்த 'தி கிங்' மற்றும் சுரேஷ்கோபி நடித்த 'கமிஷனர்' ஆகிய படங்களில் டைட்டில்களை இணைத்து 'தி கிங் அண்ட் கமிஷனர்' என்கிற பெயரில் உருவான படத்தில் மம்முட்டி, சுரேஷ்கோபி இருவருமே இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.