பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியவர் சிறுத்தை சிவா. தெலுங்கில் கோபிசந்த் நடித்த சௌர்யம் என்ற படத்தில் இயக்குனரானவர், தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை முதன்முதலாக இயக்கினார். அதன் பிறகு அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இதில் வீரம், விஸ்வாசம் என்ற இரண்டு படங்களும் ஹிட் அடித்தன. அதையடுத்து அண்ணாத்த படத்தை இயக்கியவர், தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்குமார் அந்த படத்தை முடித்ததும் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில், கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிறுத்தை சிவாவிடத்தில், அப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எந்த பதிலும் சொல்லாமல், அனைவரையும் பார்த்து கையெடுத்து ஒரு கும்பிடு போட்டு விட்டு கிளம்பிவிட்டார். இதை வைத்து பார்க்கும்போது, தற்போதைக்கு அஜித்தும், சிறுத்தை சிவாவும் இணைவதற்கு வாய்ப்பில்லை என்பது தெரிகிறது.