இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ஹிந்தியில் 'அனிமல்' என்கிற படத்தை நடிகர் ரன்வீர் கபூரை வைத்து இயக்கியுள்ளார். ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 1ந் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சந்தீப் ரெட்டி வங்கா கூறியதாவது, "நான் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவிற்கு 'டெவில்' என்கிற படத்தின் கதையை கூறினேன். அது அனிமல் படம் அல்ல. அது அனிமல் படத்தை விட வைலன்ட் ஆக இருக்கும். இதனை மகேஷ் பாபு மறுக்கவில்லை" என்று தெரிவித்தார்.