தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாலிவுட் நடிகரான அமீர் கானின் அம்மா சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக அவர் கடந்த சில வாரங்களாக சென்னையிலேயே தங்கியுள்ளார். அவர் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டில் கடந்த சில நாட்களாகத் தங்கியுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் உள்ள காரப்பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டிலிருந்து விஷ்ணு விஷால் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக காலையில் டுவீட் செய்திருந்தார். அதன்பிறகு அவரை மீட்புப் படையினர் மீட்டனர். விஷ்ணு விஷால், அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் அமீர் கான் உள்ளிட்டவர்கள் அப்போது மீட்கப்பட்டனர்.
தீயணைப்புப் படையினர் மீட்புக் குழுவினர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து விஷ்ணு விஷால் தான் மீட்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.