சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வனை, நடிகை கீர்த்தி பாண்டியன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் சபாநாயகன் மற்றும் கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி ஆகிய இரண்டு படங்களும் வருகிற டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவர்கள் இருவருமே தங்களது படங்களின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கீர்த்தி பாண்டியன் அளித்த ஒரு பேட்டியில், நான் நீண்ட காலமாகவே ஒல்லியாக இருந்தேன். அதோடு கருப்பாகவும் இருந்தேன். காரணம் நான் எப்போதுமே வெயிலில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போது என்னுடைய தோற்றத்தை பற்றியும் நிறத்தை பற்றியும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது கவலையில் அழுதேன். ஆனால் இப்போது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.