தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வனை, நடிகை கீர்த்தி பாண்டியன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் சபாநாயகன் மற்றும் கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி ஆகிய இரண்டு படங்களும் வருகிற டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவர்கள் இருவருமே தங்களது படங்களின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கீர்த்தி பாண்டியன் அளித்த ஒரு பேட்டியில், நான் நீண்ட காலமாகவே ஒல்லியாக இருந்தேன். அதோடு கருப்பாகவும் இருந்தேன். காரணம் நான் எப்போதுமே வெயிலில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போது என்னுடைய தோற்றத்தை பற்றியும் நிறத்தை பற்றியும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது கவலையில் அழுதேன். ஆனால் இப்போது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.