மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் |
கே.ஜே.ஆர் ஸ்டுடியோ மற்றும் கவுஸ்டப் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் 'ஆலம்பனா'. பாரி கே.விஜய் இயக்கி உள்ள இந்த படத்தில் வைபவ், பார்வதி நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்வில் வைபவ் பேசியதாவது: எப்போதும் ஜெய், பிரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான பேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என்றார்.
நடிகை பார்வதி பேசியதாவது : எனக்கு காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும். அப்படியான ஒரு படத்தில் இப்போது நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் முனீஷ்காந்த், காளி வெங்கட் , ஆனந்த்ராஜ் என நல்ல அனுபவமிக்க நடிகர்களோடு வேலை பார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். என்றார்.