தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமீபகாலமாக தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் போஸ்டர்களில் எல்லாமே அவர்கள் புகை பிடிப்பது போன்ற காட்சி தான் தவறாமல் இடம் பெறுகிறது. இதுகுறித்த கடுமையான விமர்சனங்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் படத்திலும் அவர்கள் சிகரெட் குடிக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தின் போஸ்டர்களில் எல்லாம் பெரும்பாலும் அவர் புகை பிடிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நிஜமாகவே தனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என்றும் புகை பிடிப்பதை எப்போதும் ஊக்கப்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார் மகேஷ்பாபு.
இதுகுறித்து மகேஷ்பாபு கூறும்போது, “இந்த படத்தில் முதல் நாள் நிஜமான பீடி பிடித்தபோது அதனால் ஏற்பட்ட தலைவலியை என்னால் தாங்க முடியவில்லை. அதற்கு பிறகு இதுபற்றி இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸிடம் கூறியபோது, இந்த ஆயுர்வேத பீடியை உபயோகிக்க முடிவு செய்தோம். இதை புகைத்தபோது மனதிற்கு மட்டுமல்ல மூளைக்குமே நல்ல சுறுசுறுப்பு ஏற்பட்டது. அதன் புகையால் ஏற்பட்ட நறுமணம் கூட இனிமையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.