ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
காதிர்ஸ் எண்ட்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரித்துள்ள படம் 'ஆத்மா'. ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். நாயகியாக 'தில்லுக்கு துட்டு 2' புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஆடிசம் பாதித்த இளைஞராக முதன் முறையாக நரேன் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: 'கைதி' படத்திற்கு பிறகு எனக்கு போலீஸ் கேரக்டர்கள்தான் அதிகமாக வந்தது. 10 படங்களுக்கு மேல் நிராகரித்து விட்டேன். பல படங்களில் நடித்தாலும் எனது நடிப்பு திறமையை நிரூபிக்கிற ஒரு கேரக்டர் அமையவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதை போக்கும் வகையில் அமைந்த படம்தான் ஆத்மா. எனது கேரியரில் இது முக்கியமான படம்.
இந்த கதையை கேட்டவுடன் என்னால் இப்படியான கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இது தொடர்பாக வந்த சில ஆங்கில படங்கள், கமல் நடித்த 'சிப்பிக்குள் முத்து' படங்களை பார்த்து நடிக்கும் தைரியம் வந்தது. ஆடிசம் பாதித்தவர்களை சந்தித்து அவர்களது குரல்மொழி, உடல் மொழியை கற்றுக் கொண்டேன். பொதுவாக ஆடிசம் பாதித்தவர்கள் குழந்தைகளாக, சிறுவர்களாக இருப்பார்கள். ஆடிசம் பாதித்த இளைஞர்களை பார்ப்பது அரிது. அதனால் அந்த பயிற்சி பெற மிகவும் சிரமப்பட்டேன். 2 வருடங்கள் இதற்காக நேரம் ஒதுக்கி, 12 கிலோ வரை எடை கூட்டி நடித்திருக்கிறேன். இந்த கேரக்டர் எனக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்கிறார்கள். அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. எனது திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் போதும். என்கிறார் நரேன்.