நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தை உருவாக்கியவர் பிரதாப் ரெட்டி. இவரது வாழ்க்கை வரலாற்றையும், அப்பல்லோ நிர்வாகம் வளர்ந்த விதத்தையும் நிம்மி சாக்கோ என்பவர் 'அப்போலோ ஸ்டோரி' என்ற புத்தகமாக எழுதியுள்ளார். பிரதாப் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு நடிகர் ராம்சரணின் மனைவியும், பிரதாப் ரெட்டியின் பேத்தியுமான உபாசனா பேசியது:
எங்களுடைய தாத்தாவின் பிறந்த நாளான இன்று எங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள். இன்று வெளியிடப்பட்டிருக்கும் 'அப்போலோவின் கதை' எனும் புத்தகத்தில் ஒரு மனிதனின் சாதனைப் பயணம் எழுதப்பட்டிருக்கிறது. இந்த புத்தகம் தந்தையானவர், தன்னுடைய மகள்களின் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு. இந்த புத்தகம் அவரின் தொழில் வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையும் எப்படி சமாளித்து வெற்றிப் பெற்று சாதனை படைத்தார் என்பது இடம்பெற்றிருப்பது சிறப்பானது. அவருடைய பெண் வாரிசுகளான நாங்கள், மருத்துவ துறையில் அவர் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை மேலும் விரிவுப்படுத்தவும், அவர் காட்டிய பாதையில் சொந்த வாழ்க்கையையும், தொழில் ரீதியிலான வாழ்க்கையும் திறம்பட சமாளித்து அவரின் கனவை நனவாக்கவும் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த புத்தகம் ஒவ்வொரு மகள்கள் மீதும் அவர்களது தந்தை வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு. என்றார்.
இதை தொடர்ந்து, பிரதாப் ரெட்டியின் வாழ்கை சினிமாவாக எடுக்கப்படுமா, அதில் உங்கள் கணவர் ராம் சரண் நடிப்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த உபாசனா “கண்டிப்பாக அதை பான் இந்தியா படமாக எடுக்கலாம். எதிர்காலத்தில் நடக்கும். அதில் எனது கணவர் ராம்சரண் நடிப்பாரா என்பதை நான் தீர்மானிக்க முடியாது. அதை படத்தின் இயக்குனர்தான் தீர்மானிப்பார்” என்றார்.