பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
தமிழில் பாபா, மிலிட்டரி, பாலா உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் ருத்ரவீணை, இளவரசி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் சந்தோஷி. திருமணத்திற்கு பின் நடிப்பதை விட்டுவிட்டு மேக்கப், பேஷன் போன்ற பிசினஸ்களில் பிசியாகிவிட்டார். உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று மேக்கப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வரும் சந்தோஷி, அண்மையில் இலங்கையில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார். இலங்கை பயிற்சி வகுப்பின் போது பரிமாறப்பட்ட உணவுகளில் அசைவ உணவு மட்டுமே இருந்ததாகவும், சைவம் சாப்பிடும் சந்தோஷிக்கு வேறு உணவை ஏற்பாடு செய்யாமல் வெறும் ஜூஸை மட்டுமே நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வழங்கியதாகவும் சந்தோஷி கூறியுள்ளார். மேலும், பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் முறைப்படி சாப்பாடு வழங்கமால் சாப்பாடு பொட்டலங்களை வழங்கியதாகவும் அதையும் மிக தாமதமாகவே ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறியுள்ளார். இதை அந்த நிகழ்ச்சியின் மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்திருந்த சந்தோஷி தனது நிகழ்ச்சியில் இப்படி நடந்தது தனக்கு மிகவும் அசிங்கமாகவும் வேதனையாகவும் இருப்பதாக கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.