தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை ராஷ்மிகா மந்தனா ஜப்பான் நாட்டில் நேற்று நடந்த கிரன்ச்சிரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார். அங்குள்ள ரசிகைகள் சிலர் ராஷ்மிகாவை சந்தித்து வரவேற்றதில் ராஷ்மிகாவும் மகிழ்ச்சியடைந்து பதிவிட்டிருந்தார்.
அடுத்து ஜப்பான் நாட்டிற்குச் சென்றது குறித்து மகிழ்ச்சியான பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. “சிறு வயதிலிருந்தே, நான் பல வருடங்களாகப் போக வேண்டும் என்று கனவு கண்ட இடம் ஜப்பான். அது நடக்கும் என்று நினைக்கவே இல்லை. அனிமே உலகத்தில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய ஒருவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. கடைசியில் அது நனவானது.
இங்கு அனைவரையும் சந்திக்க முடிந்தது, நம்ப முடியாத அன்பைப் பெறுவது, இவ்வளவு அன்பான வரவேற்பைப் பெறுவது, உணவு, வானிலை, சுத்தமான இடங்கள், அழகான மனிதர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. நன்றி ஜப்பான்… உண்மையில்… நான் உன்னை காதலிக்கிறேன், உண்மையிலேயே….நீ மிக சிறப்பானவர். இனி, ஒவ்வொரு வருடமும் இங்கு வருவேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.