ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டேல்'. இதில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க, 'கார்த்திகேயா 2' புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்க, அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன்பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட அங்குள்ள ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
அங்கிருந்து எப்படி தப்பித்து மீண்டும் இந்தியாவுக்கு அவர் திரும்புகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் ஒரு பாகிஸ்தானிய சிறை செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட இருக்கின்றனவாம்.