ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
18வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்டது. 7 கட்டமாக நடக்க உள்ள தேர்தல் தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழ் சினிமா வெளியீட்டுத் தேதிகளில் தீபாவளி, பொங்கல் ஆகிய நாட்களுக்குப் பிறகு தமிழ்ப் புத்தாண்டு நாள் முக்கியமான வெளியீட்டு நாள். பள்ளிகளுக்கான தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகும் காலகட்டம். அதனால் அந்த நாளில் பல புதிய படங்கள் வெளியாகும். இந்த வருடம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று புதிய படங்கள் வெளிவர வாய்ப்பிருக்காது.
தேர்தல் முடிந்த பின் ஒரு வாரம் கழித்து ஏப்ரல் 26ம் தேதி வேண்டுமானால் புதிய படங்களை வெளியாகலாம். இருந்தாலும் தமிழ்ப் படங்கள் நன்றாக ஓடும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் தேர்தல் தேதியையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கேரளாவில் ஏப்ரல் 26ம் தேதி ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாகவும், ஆந்திரா, தெலுங்கானாவில் மே 13ம் தேதி ஒரே கட்டமாகவும் நடக்க இருக்கிறது. ஏப்ரல் 14 முதல் மே 13 வரை சுமார் ஒரு மாத காலம் தென்னிந்தியாவில் லோக்சபா தேர்தல் காரணமாக பரபரப்பான பிரசாரம் நடைபெறும்.
எனவே, அந்த ஒரு மாத காலத்திற்கு தமிழில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் கூட புதிய படங்களை வெளியிடத் தயங்குவார்கள். மே 13ம் தேதிக்குப் பிறகுதான் புதிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை முடிவு செய்தாக வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதே காலகட்டங்களில் ஐபிஎல் போட்டிகளும் பரபரப்பாக நடைபெறும். அதனால், இந்த வருட கோடை விடுமுறை சினிமாவைப் பொறுத்தவரை சோகமான விடுமுறையாக அமையவே வாய்ப்புகள் அதிகம்.