துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
‛கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும்' என பல படங்களில் நடித்த அஞ்சலி தற்போது நிவின் பாலி நடிப்பில் ராம் இயக்கி உள்ள ‛ஏழு கடல் ஏழு மலை' மற்றும் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‛கேம்சேஞ்சர்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏழு கடல் ஏழுமலை படம் தனக்கு தமிழில் மீண்டும் ஒரு பெரிய என்ட்ரியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் அஞ்சலி.
இந்த நேரத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை அஞ்சலி காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது. என்றாலும் இந்த செய்தி உண்மையா? இல்லை வழக்கம்போல் அஞ்சலி குறித்து வெளியாகும் வதந்திகளில் இதுவும் ஒன்றா? என்பது விரைவில் தெரியவரும்.