ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
20, 30 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படங்களை ரீமேக் செய்வதும் அதன் இரண்டாம் பாகங்களை எடுப்பதும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் சிலர் அப்படி தங்களது ஹிட் படங்களை ரீ ரீலீஸ் செய்து அதன் மூலமும் வசூல் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் பார்த்திபன் நடிப்பில் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த அழகி திரைப்படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபனிடம் உங்களுடைய புதிய பாதை படத்தையும் இதே போல ரீ ரிலீஸ் செய்வீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பார்த்திபன், “என்னுடைய புதிய பாதை படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 33 வருடங்கள் கழித்து மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன். அதற்கு 'டார்க் வெப்' என்று பெயர் வைத்துள்ளேன். என்னுடைய 'டீன்ஸ்' படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன்” என்று கூறியுள்ளார்.