தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், சமீபத்தில் வெளியான அவரது சலார் திரைப்படம் ஆவேரேஜான வரவேற்பை பெற்றாலும் கூட பிரபாஸுக்கான கிரேஸ் மற்றும் வியாபார மதிப்பில் எந்த சரிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக கல்கி படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்ததாக ஸ்பிரிட் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இடையில் ஓய்வுக்காகவும் மருத்துவ சிகிச்சைகளுக்காகவும் அவ்வப்போது லண்டன் சென்று வருகிறார் பிரபாஸ். அங்கே செல்லும்போதெல்லாம் அவர் வழக்கமாக வாடகைக்கு ஒரு மிகப்பெரிய பங்களா ஒன்றை தேர்வு செய்து தங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது அந்த பங்களாவையே விலை கொடுத்து வாங்கி தனக்கு சொந்தமாக்கியுள்ளாராம் பிரபாஸ். இதை அடுத்து தனது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு அந்த பங்களாவில் சில புதிய வேலைப்பாடுகளையும் பிரபாஸ் செய்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.