ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2024ம் ஆண்டின் கடந்து போன மூன்று மாதங்களில் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி, சாதனை வசூல், சிறப்பான வரவேற்பு என்று சொல்லும்படியான படங்கள் ஒன்று கூட வரவில்லை. 60 படங்கள் வந்தாலும் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல் தரும் படம் எதுவும் இல்லை என்பது வருத்தமே.
தற்போது தேர்தல் பிரச்சாரம், ஐபிஎல் போட்டிகள், தேர்வுகள் என போய்க் கொண்டிருக்கிறது. அதனால், மக்கள் தியேட்டர்கள் பக்கம் வர யோசிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே தேர்வுகள் முடிந்துவிடும், தேர்தல் பிரச்சாரமும் முடிந்துவிடும். எஞ்சியிருப்பது ஐபிஎல் போட்டிகள்தான். அதுவும் இரவு நேரங்களில்தான் நடக்கப் போகிறது.
எனவே, ஏப்ரல் 19ம் தேதிக்குப் பிறகு புதிய படங்களை வெளியிட தயாராகி வருகிறார்கள் திரையுலகினர். ஏப்ரல் 26ம் தேதி விஷால் நடித்துள்ள 'ரத்னம்' வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அப்படத்துடன் தமன்னா, ராஷிகண்ணா நடித்துள்ள 'அரண்மனை 4,' சந்தானம் நடித்துள்ள 'இங்கு நான்தான் கிங்கு' ஆகிய படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.
மே மாத கோடை விடுமுறையில் இன்னும் சில பல பெரிய படங்களையும் வெளியிட வாய்ப்புகள் உள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் பல படங்களின் வெளியீடு பற்றிய அப்டேட்டுகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.