2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திகரனி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ‛ரத்னம்' படம் நாளை(ஏப்., 26) வெளியாகிறது. அதிரடி ஆக் ஷன் படமாக வெளியாகிறது. இந்த படத்திற்காக பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்துள்ளனர் விஷால், ஹரி. இந்நிலையில் இந்த படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக விஷால் குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛ரத்னம் படத்திற்கான விநியோக தொகை பாக்கியை தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் படம் வெளியாகும் என அங்குள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது. இதுபற்றி பேச முயன்றால் என் அழைப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்துக்கு சமமானது. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு என்ன கதியாகும்'' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியின் போது தனது மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும்படி ரெட் ஜெயன்ட் நிறுவனம் கூறியதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த பிரச்னையால் தனது ரத்னம் படத்திற்கு கூட பிரச்னை வரலாம் என தெரிவித்து இருந்தார்.