சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
தனது அழகாலும், நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சவுந்தர்யா 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஏப்ரல் 17) இதே மாதிரியான ஒரு தேர்தல் காலத்தில் தீவிர பிரச்சாரம் செய்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், கார்த்திக் ஜோடியாக தமிழில் 'பொன்னுமணி' படத்தில் அறிமுகமானார் சவுந்தர்யா. தொடர்ந்து அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் ரஜினிக்கும், காதலா காதலா படத்தில் கமல்ஹாசனுக்கும், தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் விஜயகாந்துக்கும் ஜோடியாக நடித்திருந்தார் . கன்னடம், மலையாளம், தெலுங்கு தனது எல்லைகளை விரிவாக்கினார்.
முன்னணியில் இருந்தபோதே பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருந்த சவுந்தர்யா, தன் சகோதரர் அமர்நாத் உடன் கரீம் நகரில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார். அப்போது விபத்து ஏற்பட்டது. இதில் சவுந்தர்யா, அமர்நாத், ஹெலிகாப்டரை இயக்கிய விமானி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
அவர் உயிரிழப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தன்னை அறிமுகப்படுத்திய ஆர்.வி.உதயகுமாரிடம் பேசி உள்ளார். இதுகுறித்து ஆர்.வி. உதயகுமார் ஒரு முறை கூறும்போது, திடீரென எனக்கு சவுந்தர்யாவிடமிருந்து போன் வந்தது. அப்போது, சினிமாவில் அவர் நடிக்க வாய்ப்பளித்து உதவியதற்கு நன்றியை தெரிவித்த அவர், இந்த உதவியை காலம் உள்ளவரை நான் மறக்க மாட்டேன் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். இன்றைக்கு நான் வானத்தில் பறப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறினார். ஏன் சவுந்தர்யா இப்படி எல்லாம் பேசறே, என்னாச்சு உனக்கு என்றும் அவரிடம் கேட்டேன். இல்ல சார் ஏதோ பேசணும்னு தோணியது அதனால் பேசினேன் என்று கூறி போனை வைத்தார். அடுத்த 2 மணி நேரத்தில் அவர் விபத்தில் இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.