ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
கடந்த சில மாதங்களாகவே மலையாள திரை உலகில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி, 200 கோடி என மிக பெரிய வசூல் இலக்கை தொட்டு சாதனை படைத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்விராஜ் நடிப்பில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படமும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்க சென்ற கேரள இளைஞன் பட்ட துன்பங்களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
கலகலப்பான பிரேமலு, விறுவிறுப்பான மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் போல அல்லாமல் இந்த படம் கொஞ்சம் சீரியஸான கதை அம்சத்துடன் உருவாகி இருந்தது. ஆனாலும் இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் அதே போன்ற வரவேற்பை முதல் நாளிலிருந்தே கொடுத்து வருகின்றனர். தற்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து 150 கோடி இந்தப் படம் வசூலித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் பிரித்விராஜ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.