சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரது நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான படம் மணிசித்திரதாழு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் அப்போது 7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தான் பின்னர் கன்னடத்தில் ஆப்தமித்ரா, தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி. வாசு.
தமிழில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் சென்னையில் மட்டும் ஓராண்டு ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது மணிசித்திரதாழு படம் குறித்து போஸ்டருடன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில், ‛மணிசித்திரதாழு படத்தை கிட்டத்தட்ட 50 முறை பார்த்திருக்கிறேன். இயக்குனர் பாசில் அவர்களின் கிளாசிக் படம் இது. ஷோபனா சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கினார். மோகன்லால் அவர்களால் இந்த தேசத்துக்கே பெருமை' என்று பதிவிட்டு இருக்கிறார் செல்வராகவன்.