சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'ஹனு மான்' படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் 300 கோடிக்கும் அதிகமான வசூல் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பிரசாந்த் வர்மா. இந்த ஆண்டு தெலுங்கில் வந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படம்.
பிரசாந்த் வர்மா அடுத்ததாக இப்படத்தின் அடுத்த பாகமான 'ஜெய் ஹனுமான்' படத்தை இயக்க உள்ளார். இதற்கடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்தப் படம் டிராப் ஆகிறது என்றும் சொல்லி வந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் பிரசாந்த் வர்மா தரப்பில் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். படத்திற்கான கதை முழுமையாகத் தயாராக உள்ளதாம். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.